Friday, October 7, 2011

Print | E-mail சனிக்கிழமை, 8, அக்டோபர் 2011 (9:5 IST) 2016ல் பா.ம.க. ஆட்சி: ராமதாஸ் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதா

Print | E-mail
சனிக்கிழமை, 8, அக்டோபர் 2011 (9:5 IST)


2016ல் பா.ம.க. ஆட்சி: ராமதாஸ்

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,


உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும். இதனை நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்துள்ளோம். கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை வசதி ஆகியவற்றுக்கு உள்ளாட்சிக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். இதற்கு முடிவு எடுத்து செயல்படுத்துகிற அதிகாரத்தை உள்ளாட்சிக்கு மாநில அரசு வழங்க வேண்டும்.


மாநிலத்துக்கு சுயாட்சி கேட்கிற திராவிட கட்சிகள் உள்ளாட்சி அமைப்புக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க வலியுறுத்தி பெற்று தர வேண்டும். மாநில அரசுகள் உள்ளாட்சிகளுக்கு 10 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது. 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனையின் ஐகோர்ட்டின் 8 வாரகால அவகாசம் முடியும் தறுவாயில் உள்ளது. 3 பேரும் புதிய மனுக்களை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளனர். தமிழக அமைச்சரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


நெல் கொள்முதல் விலையை அ.தி.மு.க. அரசு ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதை போல் கரும்பு டன்னுக்கு ரூ.2,500 அளிக்க வேண்டும்.


ராமேஸ்வரம் மீனவர்களை தொடர்ந்து தற்போது நாகை மீனவர்களும் இலங்கை மீனவர்கள் மற்றும் கடற்படையினரால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இலங்கை அரசு கடுமையான விளைவுகள் சந்திக்க வேண்டி வரும் என்று இந்திய அரசு எச்சரிக்க வேண்டும்.

தேர்தல் கமிஷன் உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக, நடுநிலையோடு நடத்த வேண்டும். தேர்தல் அமைதியாக நடைபெற தமிழ்நாட்டில் 10 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும். சாராயம் இல்லாமல் இருந்தால் தேர்தல் அமைதியாக நடைபெறும்.


சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்து நின்று இருந்தால் 40 50 தொகுதிகளில் வெற்றி கிடைத்து இருக்கும். 11 சதவீத புதிய வாக்காளர்கள் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று அ.தி.மு.க.வுக்கு ஓட்டு அளித்துள்ளனர்.


பா.ம.க. இனிமேல், திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளுடன் இணையாது. தனித்து போட்டியிடும். வருகிற 2016 ல் பா.ம.க. ஆட்சி அமைத்து மக்களுக்கு நல்ல ஆட்சி கொடுப்போம்.


வேலூர் மாநகராட்சியில் 36 வார்டுகளில் பா.ம.க. போட்டியிடுகிறது. உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் பெருமளவில் வெற்றி பெறுவோம்.


இவ்வாறு ராமதாஸ் கூறினார்.